ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு முந்தைய மெனு: 2,500 விதமான உணவுகள்; பில் கேட்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்பு

0
93

குஜராத்தின் ஜாம்நகரில் மார்ச் 1-3 வரை நடைபெறும் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோரின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் சமையல் களியாட்டத்துடன் விருந்தினர்களை திகைக்க வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

2,500 விதமான உணவு வகைகள்

இந்தூரில் இருந்து 25க்கும் மேற்பட்ட சமையல் கலைஞர்கள் வரவழைக்கப்பட்ட நிலையில் சமையல் குழு 2,500 விதமான உணவு வகைகளைக் கொண்ட ஒரு மெனுவைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

இந்த முயற்சியானது அளவு மட்டுமல்ல, தரம் மற்றும் பன்முகத்தன்மை கொண்டது, ஒவ்வொரு உணவின் சுவைகளும் உலகத் தர உணவு வகைகளின் சுவையினை உறுதி செய்யவுள்ளது.

இதன்போது, இந்தோரி உணவில் சிறப்பு கவனம் செலுத்தப்படவுள்ளதுடன், பான்-ஆசிய உணவுகளைத் தவிர, பார்சி உணவுகள் முதல் தாய், மெக்சிகன் மற்றும் ஜப்பானிய உணவு வகைகள் வரை உள்ளடங்கலாக மெனு வடிவமைக்கப்பட்டுள்ளது.

காலை உணவில் 70 க்கும் மேற்பட்ட விருப்பங்கள் இருக்கும், மதிய உணவிற்கு 250 க்கும் மேற்பட்ட விருப்பங்கள் மற்றும் இரவு உணவிற்கு 250 க்கும் மேற்பட்ட விருப்பங்கள் உள்ளன.

விருந்தினர்களுக்கு சைவ உணவு வகைகளுக்கும் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நள்ளிரவு சிற்றுண்டிகளும் வழங்கப்படும் என்பதும் தனிச்சிறப்பு.

பில் கேட்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்பு

ஆனந்த் மற்றும் ராதிகாவின் திருமணத்திற்கு முந்தைய நிகழ்வுகள், மூன்று நாட்கள் நீடிக்கும். உலக பில்லியனர்களுள் ஒருவரான பில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட உலகளாவிய முக்கிய பிரமுகர்கள் திருமண நிகழ்வில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2023 ஜனவரி 19 அன்று மும்பையில் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் நிச்சயதார்த்தம் செய்தமையும் குறிப்பிடத்தக்கது.