யாழ் குடாநாட்டில் திருந்தாத மக்கள்; நடவடிக்கை எடுக்க கோரிக்கை

0
85

  கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் பஸ்ஸின் மிதி பலகையிலிருந்து தவறி விழுந்து இருவர் உயிரிழந்தமை சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் , பஸ்ஸின் மிதிபலகையில் தொங்கியவாறு ஆபத்தான பயணங்களை இன்னமும் தொடர்கின்ற புகைப்படங்கள் சமுக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட சிலர் யாழ். நகர் பகுதியிலிருந்து காரைநகர் நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபை பஸ்ஸில், மிதிபலகையில் தொங்கியவாறு பயணித்துள்ளனர்.

வாகனத்துடன் மோதுண்டு விழும் காட்சிகள்

இதன் போது, வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனத்துடன் மோதுண்டு விழும் காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் கடந்த 19ஆம் திகதி பஸ்ஸினை நிறுத்துவதற்கு முதல், பெண்ணொருவர் இறங்க முற்பட்ட வேளை தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

அதேவேளை கடந்த 23ஆம் திகதி நல்லூர் ஆலயத்திற்கு முன்பாக பஸ்ஸின் மிதி பலகையில் பயணித்த இளைஞன் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

இரு உயிரிழப்புக்கள் அண்மையில் இடம்பெற்ற நிலையிலும், ஆபத்தான மிதிபலகை பயணத்திற்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.