பாலியல் குற்றத்திற்காக முதல் தடவை இரு திருநங்கையருக்கு ஆயுள் தண்டனை: சேலம் மாவட்ட நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு

0
104

பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக இரு திருநங்கைகளுக்கு தமிழகம், சேலம் மாவட்ட நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

சேலம் மாவட்டம் காக்காபாளையம் பகுதியை 16 வயதுடைய சிறுவனை பிரியாணி வாங்கித் தருவதாக ஏமாற்றிக் கூட்டிச் சென்று சுமார் நான்கு மணி நேரம் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இந்த நிலையில் சிறுவனின் தாயாரால் பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டு, இரு திருநங்கையர்களும் எதிராக வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் சந்தேக நபர்களின் குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. திருநங்கைகளுக்கு பாலியல் குற்றத்திற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது இதுவே முதல் தடைவை என தெரிவிக்கப்படுகின்றது.