ஐவர் படுகொலை விவகாரம்: சந்தேகநபர்களின் புகைப்படங்களை வெளியிட்டு உதவிகோரும் பொலிஸார்!

0
183

பெலியத்த பகுதியில் ஐவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸாரினால் தேடப்படும் சந்தேகநபர்கள் மூவரின் புகைப்படங்கள் மற்றும் தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

பெலியத்த, வலஸ்முல்ல வீதியில் கஹவத்தை அதிவேக வீதி நுழைவாயிலுக்கு அருகில் வைத்து ஐந்து பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட உள்ளனர்.

இந்நிலையில், சந்தேகநபர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் தங்காலை பிரிவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் – 071 8591488, நிலைய பொறுப்பதிகாரி / பெலியத்த – 0718591497 என்பனவற்றிற்கு உடனடியாக அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சந்தேகநபர்களின் விபரங்கள்

  1. பெயர் – மஹகமகே தினேஷ் பிரியங்கர அல்லது ‘சூட்டியா’ அல்லது மஹகமகே தினேஷ் பிரதீப் ஜயசேகர

முகவரி – டென்மார்க் காலனி, வேரகொட, கஹவ, அம்பலாங்கொடை

அடையாள அட்டை இலக்கம் – 892362890V

  1. பெயர் – நாணாயக்கார அகரகே நிஷாந்த சமன் குமார் டயஸ்

முகவரி – இலக்கம் 80, யாய 4, தம்புத்தேகம. இல 84, கல்பாத, அங்குருவெல்ல.

அடையாள அட்டை இலக்கம் – 740744330V

03.பெயர் – ரன்முனி மகேஷ் ஹேமந்த சில்வா

முகவரி – இல. 107/2/ B, புவக்கஹவத்த, மாகந்தன, ஊரகஹா. அடையாள அட்டை இலக்கம் – 832190942V