லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹூவின் கதை முடிந்து விடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த எச்சரிக்கையை ஈரானிய வெளிவிவகார அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் (Hossein Amir-Abdollahian) விடுத்துள்ளார்.
பாரிய தாக்குதல்
காசா மீது இஸ்ரேல் இராணுவம் நடத்தி வரும் தாக்குதலானது அதன் அண்டை நாடுகளுக்கும் பரவலாம் என்ற பதற்றமும் அச்சமும் காணப்படும் நிலையிலேயே ஈரானிய வெளிவிவகார அமைச்சர் இக் கருத்தினை வெளியிட்டுள்ளார்.
![இஸ்ரேல் பிரதமரின் உயிர் எங்கள் கையில் என ஈரான் கடும் எச்சரிக்கை | Iran Threatened Israel Prime Minister இஸ்ரேல் பிரதமரின் உயிர் எங்கள் கையில் என ஈரான் கடும் எச்சரிக்கை | Iran Threatened Israel Prime Minister](https://cdn.ibcstack.com/article/729fef51-1124-46df-bc30-139125c3c864/24-65c99f42be87a.webp)
இதேவேளை லெபானின் மீது பாரிய தாக்குதல்களை நடத்த இஸ்ரேல் ஏதேனும் நடவடிக்கை எடுத்தால், அது இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாஹூவின் இறுதி முடிவுவாக இருக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.