‘கேனாக் மில்’ கிராமம்
பிரிட்டனில் ஓய்வுபெற்றவர்கள் அனைவரும் சேர்ந்து ‘கேனாக் மில்’ என்ற கிராமத்தை வடிவமைத்துள்ளனர். இந்த கிராமத்தை வடிவமைத்தவர் ஆன் தோர்ன் எனும் கட்டிடக் கலைஞர்.
லண்டன் வாழ்க்கை முறையால் தான் சோர்ந்து போய்விட்டதால் ஓய்வுக்குப் பின்னர் அமைதியான வாழ்க்கையை வாழ விரும்பியுள்ளார் ஆன் தோர்ன். அதற்கான இடமாகவே இந்த கேனாக் மில் கிராமம் உருவாக்கப்பட்டுள்ளது.
கடந்த 2006ஆம் ஆண்டு தனது நண்பர்கள் அனைவரையும் அழைத்து 1.2 மில்லியன் டாலர்களுக்கு இந்த நிலத்தை வாங்கியுள்ளார். இப்போது இதுவொரு முழுமையான ஓய்வுபெற்றவர்களின் கிராமமாகவே மாறிவிட்டது.
இங்கு வசிப்பவர்கள் சேர்ந்து உணவு சமைப்பார்கள், நடனமாடுவார்கள், பாடல்கள் கேட்கிறார்கள். தேனீ வளர்த்தல், மண்பாண்டம் தயாரித்தல் என்பன இங்குள்ள மக்களின் தொழிலாக உள்ளது.