பறந்துகொண்டிருக்கும் போதே திடீரென மாயமான ஹெலிகாப்டர்! பரபரப்பு சம்பவம்

0
123

அமெரிக்காவில் கடற்படையினரை ஏற்றிக்கொண்டு சென்ற ஹெலிகாப்டர் ஒன்று காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் அருகே உள்ள முகாமிலிருந்து கலிபோர்னியாவுக்கு பறந்து கொண்டிருந்த போதே ஹெலிஹெலிகாப்டர் கொப்டர் மாயமானதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, ஹெலிகாப்டர் காணாமல் போகும் போது அதில் 5 கடற்படையினர் பயணித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

இச்சம்பவத்தின் போது, CH-53E Super Stallion ரக ஹெலிகாப்டரே காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமல் போன ஹெலிகொப்டரைக் கண்டுபிடிப்பதற்காக மீட்புக் குழுவினர் விசேட தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.