காவலர் உடல் தகுதி தேர்வு: 10 நாள் கைக்குழந்தையுடன் வந்த பெண்!

0
118

காவலர் பணிக்கான உடல் தகுதி தேர்வுக்கு 10 நாள் கைக்குழந்தையுடன் வந்த பெண் ஒருவர் காண்போரின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் இரண்டாம் நிலை காவலர்கள், சிறை காவலர், தீயணைப்பு வீரர்களுக்கான எழுத்து தேர்வு மாதம் நடந்தது.

இந்த எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இரண்டாம் கட்டமாக உடற்தகுதி தேர்வு கோவை உள்பட தமிழகத்தின் 4 இடங்களில் நேற்று தொடங்கியது. மேலும், இந்த தேர்வானது வருகிற பிப்ரவரி 10-ந் தேதி வரை 5 நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் கோவையில் நடைபெற்ற உடற்தகுதி தேர்வுக்கு 10 நாள் கைக்குழந்தையுடன் வந்த கள்ளக்குறிச்சி பெண் ஒருவர் காண்போரின் கவனத்தை ஈர்த்தார். போலீஸ் ஆகவேண்டும் என்ற மனைவியின் கனவை நிறைவேற்ற அவரின் கணவனும் வந்திருந்தார்.

அந்த பெண் தேர்வில் பங்கேற்கும் முன்பு தனது கணவரிடம் குழந்தையை ஒப்படைத்துவிட்டு சென்றார். இதுதொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் காண்போரை நெகிழ வைத்ததது.