பெலியத்த படுகொலை சம்பவம்; இருவர் அதிரடி கைது!

0
185

பெலியத்தவில் ஐவரின் கொலைக்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்த இரண்டு பேர் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் மிரிஹான முகாமில் உள்ள அதிகாரிகள் குழுவினால் நேற்று இரவு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இருவரும் ஹெரோயின் போதைப்பொருளுடன் காலி – வங்ச்சாவல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காலியைச் சேர்ந்த 25 மற்றும் 35 வயதுடைய நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக காலி துறைமுக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.   

பெலியத்த படுகொலை சம்பவம்; இருவர் கைது! | Beliatta Shooting Two Arrested