ரயிலில் செல்ஃபி எடுக்க முயன்ற வெளிநாட்டு பெண்.. நேர்ந்த சோகம்!

0
141

ரயிலில் பயணித்த ரஷ்ய யுவதி செல்ஃபி எடுக்க முற்பட்டபோது தவறி வீழ்ந்து பலத்த காயமடைந்துள்ளார்.

இந்நிலையில் காயமடைந்த யுவதி தெமோதர ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்தப் பெண் இன்று வெள்ளிக்கிழமை (26) ஹிக்கடுவையில் இருந்து எல்லைக்கு சென்ற ரயிலில் பயணித்தபோதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் 25 வயதுடைய கிறிஸ்டினா அலக்வானா என்பரே இவ்வாறு காயமடைந்துள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர் .

மேலும் காயமடைந்த யுவதியின் கடவுச்சீட்டு இவர் தங்கியிருந்த ஹோட்டலில் வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.