உயிரிழந்த சனத் நிஷாந்தவின் இல்லத்திற்கு சென்று உறவினர்களுக்கு ஆறுதல் கூறிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

0
155

கொழும்பில் இன்று விபத்தில் உயிரிழந்த ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு அரசியல் மட்டத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சனத் நிஷாந்தவின் இல்லத்திற்கு சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.

ராஜாங்க அமைச்சரின் கொழும்பில் இல்லத்திற்கே ஜனாதிபதி சென்றுள்ளார்.

ராகம வைத்தியசாலை

இதேவேளை சனத் நிஷங்கவின் சடலம் ராகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில், காலையில் இருந்து பெருமளவு அரசியல்வாதிகள் வைத்தியசாலையில் கூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.