நிகழ்நிலை காப்புச் சட்டம்: பாராளுமன்றத்தில் முட்டி மோதிக்கொள்ளும் ஆளும், எதிர்க்கட்சிகள்

0
160

நிகழ்நிலை காப்புச் சட்டம் மீதான விவாதம் இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்று வருகிறது. உத்தேச திருத்தச்சட்டம் இரண்டாம் வாசிப்புக்காக நேற்று பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதுடன் சட்டமூலம் மீதான இன்றைய இறுதிநாள் விவாதம் பாராளுமன்றத்தில் சூடுபிடித்துள்ளது. ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் ஆதரவான மற்றும் எதிரான கருத்துகளை வெளியிட்டு வருகின்றன.

விவாதத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இந்தச் சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு நாம் எமது கடுமையான எதிர்ப்பை வெளியிடுகிறோம். சட்டமொன்று கொண்டுவரப்பட முன் அனைத்து தரப்பினரினதும் கருத்துகளை பெற்றுக்கொண்டு உரிய நடைமுறைகளின் பிரகாரம் நிறைவேற்றப்பட வேண்டும்.

உத்தேச சட்டமூலத்தின் 54 சரத்துகளில் 34 சரத்துகள் அரசியலமைப்புக்கு முரணாக உள்ளதாக உயர்நீதிமன்றம் வியாக்கியானம் வழங்கியுள்ளது. துறைசார் மேற்பார்வை குழு இதில் என்ன செய்துள்ளதென தெரியவில்லை. கலியுகம்

இது தேர்தல் வருடமாக இருப்பதால் மக்கள்னி கருத்துச் சுதந்திரம், அடிப்படை உரிமைகளை பறிக்கும் நோக்கில் ஜனாதிபதி இந்த விடயத்தை மேற்கொண்டுள்ளார். ஒரு நபரின் விபத்துக்கு சேறு பூசும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். அதனை வரவேற்கிறோம்.

என்றாலும் இவை அனைத்தும் ஆழமான கருத்தாடல்களின் பின்னரே செயல்பாட்டுக்கு வர வேண்டும். கருத்துச் சுதந்திரம் பறிக்கப்படுவதால் டிஜிட்டல் பொருளாதாரத்துக்கு பாரிய பாதிப்பு ஏற்படும். மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள ஒரு நாட்டுக்கு இவ்வாறான சட்டங்கள் கடுமையான பாதிப்பு ஏற்படும்.

பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச உரையாற்றுகையில்,

”நாட்டில் ஒழுக்கமுள்ள மற்றும் நீதியான சமூகமொன்றை உருவாக்குவதற்கு இந்தச் சட்டமூலம் அத்தியாவசியமானதொன்றாகும். நாட்டில் உள்ள அனைத்து தரப்புகளுக்கும் செயல்படும் விதிமுறையொன்று உள்ளது.

சமூக ஊடகங்களுக்கு மாத்திரம் முழுமையான சுதந்திரத்துடன் செயல்படும் அனுமதியை வழங்க முடியாது. சமூக ஊடகங்களில் நல்ல ஒழுக்கம் உடையவர்களும் உள்ளனர். தீய ஒழுக்கங்களை கொண்டவர்களும் உள்ளன. தீய ஒழுக்கம் கொண்டவர்களே அதிகமாக உள்ளனர்.

அதனால் நாட்டில் அனைத்து தரப்பினரும் அவர்களது ஒழுக்கம் மற்றும் சட்டத்திட்டங்களை பின்பற்றி வாழ்வதற்கான சுதந்திரத்தை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டியது அவசியமாகும்.” என்றார்.

எதிர்க்கட்சிகளின் பிரதம கொரடா லக்ஷ்மன் கிரியெல்ல கருத்து வெளியிடுகையில்,

சிங்கப்பூரில் உள்ள சட்டம் போன்று எமது சட்டம் இருக்கும் என துறைசார் அமைச்சர் கூறியிருந்தார். ஊடகச்சுதந்திரத்தில் சிங்கப்பூர் 145ஆவது இடத்தில் உள்ளது. ஆசியாவில் ஊடகச் சுதந்திரம் மிகவும் மோசமாக உள்ள நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்றாகும்.” என்றார்.

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்த கருணாகரம் தெரிவிக்கையில்,

50 இற்கும் அதிகமான ஊடகவியலாளர் எமது நாட்டில் கொல்லப்பட்டுள்ளனர். அதில் 40 இற்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் தமிழர்களாகும். அரசாங்கத்தின் அட்டூழியங்களும், ஒடுக்குமுறைகளும் தமிழ் ஊடகவியலாளர்களுக்கு எதிராகவே அதிகமாக இடம்பெற்றுள்ளன.

சமூக வலையத்தளங்கள் ஊடாக பல பாதிப்புகள் சமூகத்தில் ஏற்படுகின்றன. பல குடும்பங்கள் இதனால் பிரிகின்றன. ஆனால் மக்களின் எழுச்சியை தடுக்கும் நோக்கில் இந்தச் சட்டம் நிறைவேற்றப்படக் கூடாது.”எனவும் கூறினார்.