வவுனியாவில் கைதான ஜெனிற்றாவுக்கு விளக்கமறியல்

0
221

நேற்றையதினம் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தின் தலைவி சி. ஜெனிற்றா விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் கைதான மற்றும் ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று வெள்ளிக்கிழமை (05) வவுனியாவிற்கு விஜயம் செய்திருந்தார்.

அங்கு நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற வன்னிமாவட்டங்களிற்கான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார். இதனையடுத்து வடகிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்ட நிலையில் சங்கத்தின் தலைவி உட்பட இருவர் வவுனியா பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் நேற்றையதினம் மாலை நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போது சங்கத்தின் தலைவி சி.ஜெனிற்றா எதிர்வரும் திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டதுடன் மற்றைய பெண் பிணையில் விடுவிக்கப்பட்டார்.   

வவுனியாவில் கைதான ஜெனிற்றாவுக்கு விளக்கமறியல் | Jenita Arrested In Vavuniya Remanded