தென் சீனக் கடலில் மீண்டும் ஆரம்பமான கூட்டுச் சுற்றுக்காவல்

0
125

தென் சீனக் கடலில் பிலிப்பைசும் அமெரிக்காவும் அவற்றின் இரண்டாவது கூட்டுச் சுற்றுக்காவல் நடவடிக்கையைத் தொடங்கியிருக்கின்றன. சர்ச்சைக்குரிய கடல்பகுதியில் பதற்றம் தொடரும் வேளையில் இருநாட்டின் கூட்டு நடவடிக்கை இடம்பெறுகிறது.

அமெரிக்கா – பிலிப்பைன்ஸ் கூட்டணி முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வலுவாக இருப்பதாய் பிலிப்பைன்ஸ் ஆயுதப்படைத் தலைவர் கூறினார்.

வட்டாரச் சவால்களுக்கு இடையே இருதரப்பும் விதிமுறைகள் அடிப்படையிலான அனைத்துலக ஒழுங்கை முன்னெடுத்துச் செல்வதாக அவர் சொன்னார். சுதந்திரமான இந்தோ-பசிபிக் வட்டாரத்திற்காக அந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.