லண்டனில் கொல்லப்பட்ட 4 வயது சிறுவன்: நடுத்தர வயது பெண் கைது

0
104

கிழக்கு லண்டனில் நான்கு வயது சிறுவன் கத்திக்குத்து தாக்குதலுக்கு உள்ளானதை அடுத்து பொலிஸார் கொலை விசாரணையை தொடங்கியுள்ளனர்.

நேற்று இரவு 10.50 மணியளவில் சிறுவன் ஒருவன் ஆபத்தான நிலையில் இருப்பதாக வந்த தகவலையடுத்து ஹாக்னியில் உள்ள முகவரிக்கு பொலிஸார் சென்றனர்.

அங்குள்ள வீட்டில் கத்திக்குத்து காயங்களுடன் கிடந்த 4 வயது சிறுவன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.

இது தொடர்பாக சம்பவ இடத்தில் இருந்த 41 வயது பெண் கொலை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் குறித்து துரித விசாரணை நடந்து வருகிறது.

Photo Credit: Yui Mok/PA Wire) (PA Wire