போதும் நிறுத்துங்கள் என கடுப்பான விஜய்: மெகா ஹிட் படத்தை தவறவிட்ட கதை

0
131

இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிப்பில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் ஆன திரைப்படம் சண்டைக்கோழி. இந்த படத்தின் கதை முதலில் நடிகர் விஜய்க்கு தான் சொல்லப்பட்டது. அதன் பின்னர் தான் விஷாலுக்கு சென்றது.

இது குறித்து இயக்குநர் லிங்குசாமி மிக அண்மையில் அளித்த பேட்டியில், “இந்த கதையை முதலில் உருவாக்கியவுடன் நான் விஜய் சாரிடம் சென்று சொன்னேன்.

கதையை அவருக்கு விவரித்துக் கொண்டிருந்தேன். ராஜ்கிரண் கதைக்குள் நுழையப் போகிறார் என்று சொன்னவுடனே அவர் கதை சொல்வதை நிறுத்துங்கள் என்று சொல்லிவிட்டார். ஏன் என்று கேட்ட போது ராஜ்கிரண் வந்த பின்னர் அதற்கு மேல் அங்கு நான் என்ன செய்யப் போகிறேன் என்று கேட்டார்.

ஆனால் நான் அவரை சமாதானம் செய்து ஒரு பத்து நிமிடம் இரண்டாம் பாதியை கேளுங்கள். உங்களுக்கு பிடிக்கும் என்று சொன்னேன் ஆனால் விஜய் மிகவும் கறாராக வேண்டாம் என சொல்லிவிட்டார். நானும் உடனே அங்கிருந்து கிளம்பி வந்துவிட்டேன்” என்றார்.

Oruvan