கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவிய சீரற்ற வானிலையால் 1661 குடும்பங்களை சேர்ந்த 5204 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
21 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
கரைச்சி மற்றும் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுகளிலேயே இவ்வாறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவின் தகவல்
கரைச்சி பிரதேச செயலாள் பிரிவில், 445 குடும்பங்களை சேர்ந்த 1452 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 05 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
கண்டாவளை பிரதேச செயலாள் பிரிவில், 1216 குடும்பங்களை சேர்ந்த 3752 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 16 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
வெள்ளம் வடிந்து வரும் நிலையில், தொடர்ந்தும் புள்ளி விபரங்கள் திரட்டப்பட்டு வருகின்றன.
இதேவேளை, பாதிக்கப்பட்டவர்கள் உறவினர் வீடுகளில் தங்கியுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளதுடன், மக்கள் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.