தலையில் 18 ஆண்டுகளாக சிக்கியிருந்த தோட்டா: சாதனை படைத்த மருத்துவர்கள்!

0
112

ஏமன் நாட்டை சேர்ந்த நபரொருவரின் தலையில் கடந்த18 ஆண்டுகளாக சிக்கியிருந்த துப்பாக்கி தோட்டாவை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.

தலையில் 3 சென்டிமீட்டர் நீளமுள்ள தோட்டாவுடன் 18 ஆண்டுகளாக வாழ்ந்து வந்த ஏமன் நாட்டை சேர்ந்த நபருக்கு பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து வெற்றிகரமாக சாதனை படைத்துள்ளார்கள்.

குறித்த இளைஞன் தனது உடன்பிறந்த 6 சகோதரர்கள் மற்றும் மூன்று சகோதரிகளுடன் யேமனில் உள்ள ஒரு கிராமத்தில் வளர்ந்து வந்துள்ளனர்.

அவருக்கு 10 வயது இருக்கும் போது கடைக்கு சென்று வீடு திரும்பும் போது இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலுக்கு இடையில் சிக்கியுள்ளார்.

அப்போது ஒரு தோட்டா அவரது இடது காதுக்கு அருகே உள்ள (left temporal bone) எலும்பில் ஆழமாக ஊடுருவி அடுத்து குறித்த சிறுவனின் தலை மற்றும் காதிலிருந்து இரத்தம் வெளியேறியது.

உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் தோட்டாவை தலையிலிருந்து அகற்றவில்லை. இந்த காயத்தினால் அவர் காதுகேளாதவர் ஆனார். கடுமையான தலைவலியால் பாதிக்கப்பட்டார். துப்பாக்கி தோட்டா காதுக்குள் நுழைந்ததால் காது கால்வாய் சுருங்கியது.

தலையில் 18 ஆண்டுகளாக சிக்கியிருந்த தோட்டா: சாதனை படைத்த மாணவர்கள்! | Bullet Stuck In Head For 18 Years Yeman Person

தோட்டாவின் ஒரு பகுதி காதுப் பகுதியில் பதிந்தது. தோட்டாவின் உள் முனை எலும்பில் பதிந்து காயம் ஆறாமல் தடுத்தது. அங்கு சீழ் படிந்ததால் அடிக்கடி காதில் தொற்று ஏற்பட்டு பின்னர் தலைவலி ஏற்பட்டது.

குறித்த நபருக்கு இப்போது 29 வயதாகிறது. கடந்த 18 ஆண்டுகளாக வலியுடனும் வேதனையுடனும் வாழ்ந்து வந்துள்ளார். தோட்டா இரத்த நாளங்களுக்கு மிக அருகில் இருந்ததால் அதனை அகற்றப்பட்ட பிறகு நோயாளிக்கு இரத்தம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று மருத்துவர்கள் கூறினர்.

தலையில் 18 ஆண்டுகளாக சிக்கியிருந்த தோட்டா: சாதனை படைத்த மாணவர்கள்! | Bullet Stuck In Head For 18 Years Yeman Person

தோட்டவுடன் தொடர்புடைய இரத்த நாளங்களைக் கண்டறிய MRIக்குப் பதிலாக Contrast CT Angiographyயை அறுவை சிகிச்சை குழு தேர்வு செய்தது.

மேலும் Basic two-dimensional X-ray கதிர்களைப் பயன்படுத்தி தோட்டாவின் சரியான இடத்தைக் கண்டறிந்து தோட்டாவை துல்லியமாக அகற்றப்பட்டது.

இதனால் நோயாளிக்கு பாரிய இரத்தப்போக்கு ஏற்படவில்லை. அறுவைசிகிச்சை நோயாளியின் வலியைப் போக்கியது மற்றும் ஓரளவு கேட்கும் திறனைப் அவர் பெற்றுள்ளார். சிகிச்சை முடிந்து ஏமன் நாட்டுக்கு திரும்பிய அந்த இளைஞன் தற்போது குணமடைந்து வருகிறார்.