இலங்கை ஊடகவியலாளருக்கு கிடைக்கப்பெற்ற விருது!

0
147

கிழக்குத் தீமோர் நாட்டின் ஜனாதிபதி ஜோஸ் ரமோஸ் ஹோர்டாவினால் நேற்றைய தினம் (27.11.2023) இலங்கையின் ஊடகவியலாளரும் மனித உரிமைப் செயற்பாட்டாளருமான ஃப்ரெடி கமகேவுக்கு திமோர் லெஸ்டே எனும் கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.

கிழக்குத் தீமோரின் சுதந்திரத்திற்கான பிரச்சாரத்தில் அவர் ஆற்றிய பங்களிப்பை பாராட்டும் முகமாக இந்தக் கௌரவம் அமைந்துள்ளது.

வேறொரு நாட்டின் பத்திரிகையாளர் ஒருவர் கிழக்கு திமோரின் தலைநகரில் பாராட்டப்படுவது இதுவே முதல் தடவையாகும். இது சமூக நீதிக்காக இடைவிடாத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ப்ரெடி கமகேவுக்கு மட்டுமின்றி இதுபோன்ற பலருக்கும் கிடைத்த சிறப்பு மரியாதையாக இது கருதப்படுகிறது. 

இலங்கை ஊடகவியலாளருக்கு கிடைக்கப்பெற்ற விருது! | The Sri Lankan Journalist Received An Award
இலங்கை ஊடகவியலாளருக்கு கிடைக்கப்பெற்ற விருது! | The Sri Lankan Journalist Received An Award