இரவு வேளையில் வீடு புகுந்து குளியல் அறையில் பெண்களை வீடியோ எடுத்த நபர்! யாழில் சம்பவம்

0
229

யாழ்ப்பாணம் – நீராவியடி பகுதியில் வீட்டு உரிமையாளருக்கு தெரியாமல் இரவு வேளைகளில் வீட்டிற்குள் புகுந்து குளியல் அறையில் பெண்கள் குளிப்பதை கமரா மூலம் காணொளிக்களை எடுத்து மிரட்டும் மர்ம நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் யாழ் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

சந்தேக நபருக்கு எதிராக சில பெண்கள் சிறுவர் பெண்கள் பொலிஸ் பிரிவில் முறைப்பாட்டை பதிவு செய்ததன் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

யாழில் இரவு வேளையில் வீட்டிற்குள் புகுந்து குளியல் அறையில் பெண்களை வீடியோ எடுத்த மர்ம நபர்! | Jaffna House Night Women Bathing Took Video Person

இவ்வாறான நிலையில், குறித்த சந்தேக நபரை கண்காணிப்பு கமரா உதவியுடன் கைது செய்த யாழ் பிராந்திய பொலிஸ் புலனாய்வு பிரிவினர் குறித்த நபரை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் சிறுவர் பெண்கள் பிரிவில் பாரபடுத்தினர்.

இதன்படி, சந்தேக நபர் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.