தினேஷ் மற்றும் பிரசன்னவுடன் ஜனாதிபதி ரணில் இரகசிய சந்திப்பு..

0
193

கொழும்பு அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்த்தனவையும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவையும் இரகசியமாக அழைத்து முக்கிய பேச்சு நடத்தியுள்ளார் என்று தெரியவந்துள்ளது.

கடந்த வாரம் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது என்று கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கலந்தாலோசித்த விடயம்

ஜனாதிபதி செயலகத்தில் மிகவும் இரகசியமான முறையில் நடைபெற்ற அந்தச் சந்திப்பு அரை மணி நேரத்துக்கும் மேலாகத் தொடர்ந்தது என்று குறித்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், அவர்கள் மூவரும் கலந்தாலோசித்த விடயம் தொடர்பில் தகவல் வெளியாகவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.