2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை பற்றிய நேற்றைய தினம் (13.11.2023) நாடாளுமன்றில் உரையாற்றியபோது மலையகத்தின் அபிவிருத்திக்காக 10 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலையகத்தைச் சேர்ந்த 89 பிரதேச செயலகங்களை உள்ளடக்கிய பத்து வருட பல்நோக்கு கிராமிய மற்றும் சமூக அபிவிருத்தி வேலைத்திட்டம் 2024 இல் ஆரம்பிக்கப்படும்.
அதற்காக 2024 ஆம் ஆண்டில் 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.