54 பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

0
155

நாட்டின் எட்டு மாவட்டங்களுக்கு உட்பட்ட 54 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு குறித்த எச்சரிக்கை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தால் விடப்பட்டுள்ளது.

மண்சரிவு அபாய எச்சரிக்கை 

நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை காரணமாக குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இவ் எச்சரிக்கை இன்று (11.11.2023) பிற்பகல் 3 மணி வரை நடைமுறையில் இருக்கும் என நிறுவகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, பதுளை, கொழும்பு, கேகாலை, ஹம்பாந்தோட்டை, கண்டி, குருநாகல், மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளுக்கே இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.