யாழ்.பலாலி விமான நிலையத்தில் முக்கிய குற்றவாளியில் சகா கைது!

0
179

யாழில் பல வாள்வெட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த தேவா பிரசண்ணாவின் சகா பலாலி விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் இந்தியாவில் இருந்து வரும் போது, யாழ் மாவட்ட குற்றதடுப்புபிரிவு பொறுப்பதிகாரி தெ.மேனன் தலமையிலானா குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவருக்கு திறந்த பிடியானை யாழ்ப்பாண நீதிமன்றால் வழங்கப்பட்டுள்ளது.

கைதான சந்தேகநபருக்கு பல வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்திலும் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு போதைப் பொருளை கடத்தினாரா என்ற கோணத்திலும் யாழ் மாவட்டகுற்றத்தடுப்பு பிரிவால் விசாரனை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

 கைது செய்யப்பட்ட 27 வயதுடைய சந்தேகநபர் நாளை யாழ்ப்பாணம் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.