கொழும்பில் ஒன்றுகூடவுள்ள மொட்டு கட்சியினர்!

0
152

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஏழாவது ஆண்டு நிறைவு விழா நடைபெறவுள்ளது.

குறித்த நிகழ்வு பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று(03.11.2023) நடைபெறவுள்ளது.

85 வீத வெற்றி

இந்நிகழ்வு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச ஆகியோர் தலைமையில் நடைபெறவுள்ளது.

இந்த கட்சி கடந்த ஏழு வருடங்களில் உள்ளூராட்சி தேர்தல், ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொது தேர்தல் போன்றவற்றில் வெற்றியீட்டியுள்ளதுடன் தாமரை மொட்டு சின்னத்தில் போட்டியிட்டு 85 வீத வெற்றியை இக்கட்சி பெற்றுக்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.