இன்று இடியுடன் கூடிய கனமழை.. வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

0
153

நாட்டின் சில பகுதிகளில் இன்று பிற்பகல் 2 மணிக்குப் பின் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.

இதுதொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் 75 மில்லி மீற்றருக்கும் அதிக மழை பெய்யக்கூடும்.

மேலும் கிழக்கு மாகாணம், அம்பாந்தோட்டை மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் காலை வேளையில் மழை பெய்யக்கூடும்.

குறிப்பாக மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல்வேறு பகுதிகளில் காலை வேளையில் பனியுடன்கூடிய காலநிலை நிலவக்கூடும்.

மேலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளையில் ஏற்படும் ஆபத்துகளை தவிர்ப்பதற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.