யாழில் 10 வயது சிறுவனுக்கு பியர் கொடுத்த நபர்!

0
191

யாழில் நபர் ஒருவர் 10 வயதுச் சிறுவனுக்கு பியர் கொடுத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம்- சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாவடி பகுதியில் வைத்து அந் நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அச்சந்தேகநபர் நேற்றையதினம் முச்சக்கர வண்டியினுள் வைத்து அச் சிறுவனுக்கு பியரினை பருக்கியுள்ளார்.

இது தொடரபில் சிறுவனின் தாயார் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். இந்நிலையில் அச் சந்தேகநபர் நேற்றிரவு சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுவனின் தந்தை வேலை நிமித்தமாக வெளிநாட்டில் வசித்து வருகிறார் என்று தெரியவந்துள்ளது.