விடுதலைப் புலிகளினால் வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு இன்றுடன் 33 வருடங்களாகி விட்டதை நினைவு கூரியும் தமக்கான நஷ்ட ஈட்டை வழங்குமாறு கோரியும் புத்தளத்தில் முஸ்லிம்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.
மக்கள் மறுமலர்ச்சி முன்னனி கட்சியின் தலைவரால் புத்தளம் – கொழும்பு வீதியின் ரத்மல்யாய பகுதியில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
எந்தவொரு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை
இதன்போது விடுதலைப் புலிகளினால் வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 33 வருடங்களாகியும் காலங்காலமாக மாறி வருகின்ற அரசாங்கங்களினால் தமக்கு நன்மையான எந்தவொரு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை எனவும் ஆர்ப்பாட்டகாரர்கள் தெரிவித்தனர்.
அத்துடன் தாம் இழந்தவைக்கான நஷ்ட ஈட்டை வழங்குமாறு கோரியும் வேறு சில கோரிக்கைகளை முன்வைத்தும் இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இதன் போது தமது கோரிக்கைகளை எடுத்துக்கூறியும் கோஷங்களை எழுப்பியவாறும் பதாதைகளை ஏந்தியவாறும் பலர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.