இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு அறிக்கை..

0
135

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களின் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது காலாவதியான கடவுச் சீட்டுகளை வைத்திருப்பவர்கள் அல்லது அதனை தவறவிட்ட இலங்கையர்களுக்கு புதிய கடவுச் சீட்டுகளை விண்ணப்பிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்ட அறிக்கை | A Statement To Sri Lankans In Israel

அறிக்கை

இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார அறிக்கை ஒன்றை விடுத்து இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அதற்காக இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு பிரவேசிப்பதற்கு உரிய ஆவணங்களை சமர்ப்பித்து, கட்டணம் செலுத்தி குறித்த விண்ணப்பங்களை கையளிக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேலில் நடத்திய தாக்குதலில் உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்ட அனுலா ரத்நாயக்கவின் சடலம் இன்று நாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.