கொழும்பில் உள்ள பகுதியொன்றில் இடம்பெற்ற வாகன விபத்தில் 7 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் நேற்றிரவு (26.10.2023) 8.45 மணியளவில் மகரகம பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விபத்து மோட்டார் சைக்கிள் ஒன்றும் கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் சம்பவித்துள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 7 வயதுடைய லோகேஸ்வரன் சயந்தன் என்ற சிறுவனே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்ற சிறுவனின் தந்தையான 38 வயதுடைய ராமச்சந்திரன் லோகேஸ்வரன் என்பவர் படுகாயமடைந்து வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்தில் உயிரிழந்த சிறுவனும், படுகாயமடைந்த தந்தையும் நீர்கொழும்பை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, காரின் சாரதி சிறு காயங்களுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.