கொழும்பில் பாரிய தீ விபத்து! பலர் பாதிப்பு

0
202

கொழும்பில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புறக்கோட்டை இரண்டாவது குறுக்குத் தெருவில் உள்ள கடை ஒன்றிலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

ஏழு தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

தீப்பரவலினால் கடுமையான புகை சூழ்ந்துள்ளதாக கொழும்பு தீயணைப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த தீ விபத்தில் பலர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என தெரியவருகின்றது. 

ஒரு சிலர் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டுள்ளவர்களை காப்பாற்றும் பணிகளில் தீயணைப்பு மற்றும் கடற்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கட்டிடம் முழுமையாக சேதமடைந்துள்ளது.  


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery