நாளை முதல் யாழ் தொடருந்து நேர அட்டவணையில் மாற்றம்!

0
133

வடக்கு பாதையின் தொடருந்து நேர அட்டவணை திருத்தப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த திருத்தம் நாளை (21) முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்தேவி புகையிரதம் உட்பட ஏனைய சில தொடருந்துகளின் ஆரம்ப நேரம் மாற்றப்படவுள்ளதாக திணைக்களம் மேலும் குறிப்பிடுகிறது.

காங்கேசந்துறை நிலையத்திலிருந்து 

அதன்படி, யாழ் தேவி விரைவு தொடருந்து காங்கேசந்துறை ( KKS) நிலையத்திலிருந்து காலை 10 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்தேவி விரைவு தொடருந்து KKS இல் இருந்து காலை 10.30 மணிக்கு யாழ்ப்பாணம், 11.35 மணிக்கு கிளிநொச்சி, 12.50 மணிக்கு வவுனியா, 1.45 மணிக்கு அனுராதபுரம், 3.42 மணிக்கு மாஹோ சந்தி, 4.30 மணிக்கு கொழும்பு, 4.30 மணிக்கு பொல்காவல. மாலை 6.28, மாலை 6.51க்கு மவுண்ட் லாவானியாவை சென்றடையுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.