தெலங்கானா மாநிலம் ஐதராபாத் – பந்தலகுடா கீர்த்தி ரிச்மண்ட் வில்லாவில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகர் சிலை வைத்து வழிபடுவது வழக்கம்.
இந்த விநாயகருடன் லட்டு பிரசாதம் வைத்து சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்படும். விநாயகர் விசர்ஜனம் செய்வதற்கு முன்பு லட்டு ஏலம் விடப்படும்.
அப்படி இந்த ஆண்டும் லட்டு ஏலம் நடைபெற்றது. இதில் ஒரு லட்டு ₹ 1.26 கோடிக்கு ஏலம் போனது. வில்லாவில் உள்ள ஒட்டுமொத்த சமூகமும் சேர்ந்து அந்த லட்டுவை ஏலத்தில் எடுத்துள்ளனர்.
![Laddu](https://gumlet.assettype.com/oruvan%2F2023-09%2F1a549440-2f24-4c3f-814f-e3d791de646a%2Fladdu002.jpg?auto=format%2Ccompress&format=webp&w=768&dpr=0.7)