இறுதிக் கட்ட யுத்தத்தை விசாரணை செய்ய வேண்டும்..

0
167

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவத்தை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தினால் இறுதிக்கட்ட யுத்தத்தையும் சர்வதேச விசாரணைக்கு உட்படுத்த நேரிடும் என வெளிவிவகாரத்துறை இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்தார்.

நாட்டின் உள்ளக விவகாரங்களில் சர்வதேச விசாரணைகள் இடம்பெற்றால் அது நாட்டின் சுயாதீனத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.