நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாக்கப்படுவதற்கு இலங்கை அரசியலமைப்பே காரணம்!

0
186

நாட்டில் அரசியலமைப்பு தவறாக உள்ளதாகவும் அதனால்தான் பாராளுமன்ற உறுப்பினர்கள் தாக்கப்படும் நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளதாகவும் நடிகரும் பாராளுமன்ற உறுப்பினருமான உத்திக பிரேமரத்தின தெரிவித்தார்.

அநுராதபுரத்தில் தனது வாகனத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு தாக்குதல் தொடர்பில் சற்றுமுன் பாராளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “கடந்த 17ஆம் திகதி இரவு எனது வாகனம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக பொலிஸாரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் தற்போது விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு பிறகு என்னை கவனித்துக் கொண்ட மற்றும் நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி.

இதை யார் செய்தார்கள் என்பதை விட இதை யார் செய்தார்கள் என கண்டறிய வேண்டும். இந்த தாக்குதல் ஏற்கனவே திட்டமிடப்பட்டு செய்யப்பட்டது என்று நினைக்கிறேன். இந்த தாக்குதல் தவறானது என்பது அனைவருக்கும் தெரியும். நமது அரசியல் அமைப்பு தவறானது.

அதனால்தான் இந்த நாடு இந்த நிலையில் உள்ளது. இரு தரப்பிலும் தவறுகள் உள்ளன. இதற்கான சரியான இடத்தை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும்.

எங்கு மாற்றுவது என்பதை நாம் கண்டுபிடிக்க வேண்டும். இரு தரப்பும் அதைக் கண்டறிந்து செயல்பட வேண்டும். அந்த மாற்றம் வரும்வரை இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியாது.

அந்த அரசியல் மாற்றத்தை இந்த நாடு கோருகிறது. அந்த வித்தியாசத்தை மாற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம். அந்த மாற்றத்திற்காக நாங்கள் இளைஞர்களாக பணியாற்றி வருகிறோம்.“ எனவும் குறிப்பிட்டார்.