திருமண புறோக்கர்களை ஏமாற்றிய லண்டன் தம்பதிகள்; பழிதீர்த்த தரகர்கள்

0
185

லண்டனில் கலியாண புறோக்கர் சேவை ஊடாக திருமணம் செய்த  இளவயதை தாண்டிய அங்கிளுக்கும், அன்ரியும் தமக்கான புறோகர் பணத்தை வழங்கவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர்.

குறித்த நபர்கள் இலங்கையர்கள் என்றும் இருவருக்கும் திருமணம் முடிந்துவிட்டபோது இன்னும் தமக்கு புறோக்கர் காசு தரவில்லை என புறோகர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

 பழிதீர்த்த தரகர்கள்

அதோடு அந்த தம்பதிகளின் புகைப்படத்தையும் பாதிக்கப்பட்ட  புறோகர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர்.

அதேவேளை ஏமாற்றபட்ட கலியாணப் புறோக்கர் பெரும்பாலும் விவாகரத்தானவர்களுக்கும் வயதானவர்களுக்குமே திருமண தரகு வேலை செய்து வருவதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் சம்பந்தப்படவர்களின் புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பதிவேற்றி தம்மை ஏமாற்றிவிட்டதாக கூறும் கலியாண புறோக்கர் சேவை தொடர்பில் பலரும் விசனங்களை வெளியிட்டுள்ளனர்.