மொராக்கோ பூகம்பம்; உலகின் கவனத்தை ஈர்த்த குழந்தை

0
206

ஆபிரிக்க நாடான மொராக்கோவில் பூகம்பத்திற்கு சற்று முன்னர் பிறந்த குழந்தை உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.

குழந்தையின் தாயின் பெயர் கதிஜா என்றும், குழந்தைக்கு இன்னமும் பெயர் சூட்டப்படவில்லை. ஆனால் அந்த குழந்தையின் வீதியோரத்தில் உள்ள கூடாரம் ஒன்றில் தாயுடன் இருப்பதாக கூறப்படுகின்றது.

பூகம்பம் தாக்குவதற்கு சில நிமிடங்களிற்கு முன் பிறந்த குழந்தை

கடந்த வெள்ளிக்கிழமை (08) இரவு மொராக்கோவை பாரிய பூகம்பம் தாக்குவதற்கு சிலநிமிடங்களிற்கு முன்னர் கதிஜாவின் குழந்தையை பெற்றெடுத்தார்.

earthquake morocco

தாயும் குழந்தையும் காயங்களுக்குள்ளாகாத போதிலும் அவர்கள் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனை குழந்தை பிறந்து மூன்று மணித்தியாலங்களில் அவர்களை வெளியேறுமாறு கேட்டுக்கொண்டது.

மராகெஸிலிருந்து புதிதாக பிறந்த குழந்தையுடன் டடார்ட்டில் உள்ள தங்கள் கிராமத்திற்கு அந்த குடும்பத்தினர் செல்ல முயன்றனர். எனினும் மண்சரிவு காரணமாக அது சாத்தியமாகவில்லை இதன் பின்னர் அவர்கள் வீதியின் ஒரத்தில் அமைக்கப்பட்ட கூடாரத்தில் வாழ்கின்றனர்.

எனக்கு இதுவரை எந்த உதவியும் கிடைக்கவில்லை என தெரிவித்த அந்த தாயார் கடவுள் மாத்திரமே எங்களுடன் இருக்கின்றார் எனவும் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை மொரோக்கா பூகம்பத்தில் 2000 இற்கும் அதிகமானோர் உயிரிழந்த நிலையில் அங்கு மீட்பு பணிகள் தொடர்ந்து வருவதாக கூறப்படுகின்ற நிலையில் பலி எண்னிக்கை மேலும் அதிகரிக்கலாம் என கூறப்படுகின்றது.