கொழும்பு முழுவதும் வீட்டை தேடி செல்லும் பால்!

0
186

கொழும்பு முழுவதும் காலை மற்றும் மாலை வேளைகளில் வீடுகளுக்கு புதிய பசும்பால் வழங்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த வேலைத்திட்டமானது இன்று(11-09-2023) திங்கட்கிழமை முதல் நடைமுறைப்படுத்தப்படும் என தேசிய கால்நடை அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.

மேலும், நாரஹேன்பிட்டியில் உள்ள தேசிய கால்நடை அபிவிருத்திச் சபையின் வளாகத்தில் நாளை இந்த வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.