ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டியின் டிக்கெட்டுகள் தொடர்பில் தகவல்..

0
172

இலங்கை அணி பங்கேற்கும் ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டியின் சுப்பர் 4 சுற்றின் முதலாவது போட்டி இன்று கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷ் அணியுடனான போட்டி பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசியக் கிண்ண கிரிக்கட் போட்டியின் சுப்பர் 4 சுற்றுக்கான டிக்கெட் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

கிடைக்கப்பெறும் டிக்கெட்டுகள்

கொழும்பு ஆர்.பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள சுப்பர் 4 சுற்றுப் போட்டிகளைக் காண 1,000 ரூபாவிற்கு டிக்கெட்டுகள் கிடைக்கப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு ஆர்.பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் Lower Block C மற்றும் D பிரிவில் செப்டம்பர் 9, 12, 14, 15 ஆகிய திகதிகளில் நடைபெறும் போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை விளையாட்டு ரசிகர்கள் ரூ.1,000க்கு வாங்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இன்றைய போட்டி மழையால் இரத்து செய்யப்பட்டால் நாளை போட்டியை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அந்நிலையில் இன்றைய போட்டிக்கு வாங்கப்பட்ட டிக்கெட்டுகள் நாளை செல்லுபடியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.