இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இலங்கைப் பயணம் ஒத்திவைப்பு!

0
186

இலங்கைக்கு இன்றைய தினம் வருகை தரவிருந்த இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவலை கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் இன்று வெள்ளிக்கிழமை (01-09-2023) உறுதிப்படுத்தியுள்ளது.

அதன்படி, இந்திய பாதுகாப்பு அமைச்சர் வருகைக்கான புதிய திகதிகள் பின்னர் முடிவு செய்யப்படும் எனவும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை மறுபரிசீலனை செய்வதற்காக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை இலங்கைக்கு விஜயம் செய்யவிருந்தார்.

அவர் இலங்கையின் ஜனாதிபதியும் பாதுகாப்பு அமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.