இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கைக்கு வருகை..

0
194

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த வார இறுதியில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆய்வுக் கப்பல் ஒன்றின் வருகையை அனுமதிக்குமாறு சீனாவின் புதிய கோரிக்கையை இலங்கை வெளியுறவு அமைச்சு பரிசீலித்து வரும் வேளையில் இந்த இரண்டு நாள் விஜயம் அமையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இலங்கை வரும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் திருகோணமலைக்கு விஜயம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய பாதுகாப்பு அமைச்சர் எதிர்வரும் செப்டம்பர் 2 மற்றும் 3ம் திகதிகளில் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்வார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது