பொலிஸ் கான்ஸ்டபிளுடன் உறவு வைத்தவருக்கு நேர்ந்த நிலை..

0
179

பொலிஸ் கான்ஸ்டபிளுடன் உறவு கொண்டிருந்த நபர் ஒருவரை 48 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

பணி நீக்கம் செய்யப்பட்ட காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவர் மற்றும் அவருடன் நட்பு கொண்டிருந்த மற்றுமொருவருமே 48 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

 நீதிமன்றம் உத்தரவு

கம்பளை குற்றவியல் விசாரணை பிரிவினர் மாத்தளை நீதவான் நீதிமன்றில் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சந்தேக நபர்களிடம் இருந்து 3 கிலோகிராம் 95 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட ஹெரோயின் போதைப் பொருள் 3 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடையது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.