நாடாளுமன்ற அறையில் தலையணைகள் மற்றும் மெத்தை…

0
164

நாடாளுமன்ற குழு அறையில் இரண்டு தலையணைகள் மற்றும் மெத்தை ஒன்று காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவை எதற்காக இந்த அறைக்கு கொண்டு வரப்பட்டன என்பது தொடர்பில் கண்டறியப்படும் என்றும் நாடாளுமன்ற அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

நாடாமன்றத்தின் உணவு வழங்கல் மற்றும் பராமரிப்புத் திணைக்களத்தில் சில அழகான இளம் பெண்களை பணியாளர்கள் வன்கொடுமைக்கு உட்படுத்தியாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அதன் விளைவாக குழு அறைகள் சமீபத்தில் சோதனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூவரடங்கிய குழு விசாரணை

இதற்கிடையில் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழு தொடர்ந்து விசாரணைகளை நடத்தி வருகிறது.

இது தொடர்பாக பெண் ஊழியர்கள் உட்பட கிட்டத்தட்ட 20 பேரின் வாக்குமூலங்களை குழு ஏற்கனவே பதிவு செய்துள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை இந்த விசாரணைகளுக்கு இடையூறு விளைவிப்பதற்கும் செல்வாக்கு செலுத்துவதற்கும் அதிகாரிகள் குழுவொன்று இரகசியமாக செயற்பட்டு வருவதாகவும் அது தொடர்பில் விசேட கவனம் செலுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தி அறிக்கை வழங்குமாறு விசாரணைக் குழுவிற்கு நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகம் திருமதி குஷானி ரோஹணதீர அண்மையில் ஆலோசனை வழங்கியுள்ளார்.