முன்பள்ளி செல்ல ஆயத்தமான சிறுமி கிணற்றில் விழுந்து பலி

0
160

மாத்தறை – கம்புறுபிட்டிய பிரதேசத்தில் கிணற்றில் தவறி விழுந்து 5 வயது சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்தச் துயர சம்பவம் நேற்று (16) காலை இடம்பெற்றுள்ளது.

சிறுமி முன்பள்ளிக்குச் செல்வதற்காகக் குளித்துக் கொண்டிருந்தபோதே கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலத்தை மீட்ட பொலிஸார், பிரேத பரிசோதனைக்காகக் கம்புறுபிட்டிய வைத்தியசாலையில் ஒப்படைத்ததுடன் , மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.