வைத்திய நிபுணர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள சட்டம்..

0
198

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக் காரணமாக வைத்தியர்கள் சிலர் வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டனர்.

ஆதலால் தற்போது இலங்கையில் அதிகபடியான வைத்தியர்களின் பற்றாக்குறை நிலவி வருகின்றமைக் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இந்நிலையினை சீர்ப்படுத்தும் நோக்கில் வைத்தியர்கள் வெளிநாடு செல்வதற்கான விடுமுறை இனிவரும் காலங்களில் வழங்காமலிருக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைத்திய நிபுணர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள சட்டம்! | Law For Medical Experts

சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த தற்போது எமது நாட்டைச் சேர்ந்த வைத்தியர்கள் அமைச்சுக்கு அறிவிக்காமல் வெளிநாடு செல்வார்களாயின், அவர்களை பணிநீக்கம் மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

சுமார் 600-இற்கும் மேற்பட்ட வைத்தியர்கள் விசேட பயிற்சிக்காக தற்போது வெளிநாடு சென்றுள்ளதாகவும் அவர்களில் சுமார் 300 பேர் இந்த ஆண்டு நாடு திரும்பவுள்ளார்கள் என்றும் அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

அவர்களின் வருகையின் பின்னர் தற்போது ஒவ்வொரு துறையிலும் தற்போது நிலவும் நிபுணத்துவம் பெற்ற வைத்தியர்களின் பற்றாக்குறை ஓரளவுக்கு நிவர்த்தி செய்யப்படும் என செயலாளர் குறிப்பிட்டார்.

வைத்திய நிபுணர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள சட்டம்! | Law For Medical Experts

இதனிடையே, இந்த ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதியுடன் நிறைவடைந்த ஒரு வருட காலத்திற்குள் 274 வைத்திய நிபுணர்கள் நாட்டை விட்டுச் சென்றுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியது.

குறித்த காலப் பகுதிக்குள் விசேட தரங்களைச் சேர்ந்த 842 வைத்திய அதிகாரிகளும் நாட்டிலிருந்து சென்றுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது