அங்கோலாவில் ஆயர் ஜெர்மனோ பெனிமோட் அவர்களின் ஆயர் திருநிலைப்பாட்டுத் திருநிகழ்வு நேற்று (12.08.2023) நடைப்பெற்றது.
இதன்போது இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் திருப்பீடச் செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின் “உலகளாவிய திருஅவைக்கும் அங்கோலா நிலத்திற்கும் ஆயர் திருநிலைப்பாட்டு நிகழ்வு ஒரு முக்கியமான நிகழ்வு என்றும், திருத்தந்தையால் அங்கோலாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் திருப்பீடத்தூதுவர் ஆயர் ஜெர்மன் பெனிமோட் ஆவார்” என்றும் கூறியுள்ளார்.
மேலும்“ பாகிஸ்தான் நாட்டிற்கான திருப்பீடத்தூவராக ஆயர் ஜெர்மன் பெனிமோட் அவர்கள் கடந்த (16.06.2023) தெரிவு செய்யப்பட்டார்.
அத்தோடு திருத்தந்தையின் பிரதிநிதியாக இருந்து செயல்படுவதால் அங்கோலாவிற்கும் உரோமிற்கும் ஓர் உறவு உள்ளது ”என்றும் கர்த்தினால் பரோலின் எடுத்துரைத்துள்ளார்.
உரோமிலிருந்து ஆபிரிக்காவின் லுவாண்டா விமானத்தளத்திலிருந்து கர்தினால் பரோலின் அவர்கள் அரசு அதிகாரிகள், தவத்திரு அவைத்தலைவர்கள், துறவறத்தார் மற்றும் பொது நிலையினரால் பாட்டு, நடனம் மற்றும் பாரம்பரிய உடைகளுடன் மகிழ்வுடன் வரவேற்கப்பட்டார்.