13வது திருத்தம் தொடர்பில் கோட்டாபய ராஜபக்க்ஷ மௌனம் கலைப்பாரா!

0
131

13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவின் முயற்சிகள் தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது மௌனத்தை கலைக்கவேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் சன்னஜெயசூசுமன வேண்டுகோள் விடுத்துள்ளார்.

13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஜனாதிபதியின் முயற்சிகளை பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் சன்னஜெயசூசுமன மீண்டும் கடுமையாக கண்டித்துள்ளார்.

13வது திருத்தம் ; கோட்டாபய ராஜபக்க்ஷ மௌனம் கலைப்பாரா? | 13Th Amendment Will Gotabaya Break Silence

தற்போதைய நிகழ்ச்சி நிரலுக்கு மறைமுக ஆதரவு

தேசத்தின் நலன்களிற்கு பாதகமான விதத்தில் விக்கிரமசிங்க ராஜபக்ச அரசாங்கம் செயற்பட முயல்வதால் கோட்டாபய ராஜபக்ச தொடர்ந்தும் அமைதியாகயிருக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

2019 நவம்பரில் கோட்டாபய ராஜபக்ச வென்ற ஐந்துவருடபதவிக்காலத்தை பூர்த்தி செய்வதற்காக நாடாளுமன்றம் ரணில்விக்கிரமசிங்கவை தெரிவு செய்தது.

13வது திருத்தம் ; கோட்டாபய ராஜபக்க்ஷ மௌனம் கலைப்பாரா? | 13Th Amendment Will Gotabaya Break Silence

இநிலையில் பயங்கரவாதத்திற்கு எதிரான வெற்றியை பிரதிபலிக்கும்புதிய அரசமைப்பு என்ற வாக்குறுதியின்அடிப்படையில் வெற்றிபெற்ற கோட்டாபய ராஜபக்ச, தனது மக்கள் ஆணை துணிச்சலாக ஒற்றையாட்சியை இல்லாமல் செய்வதற்காக பயன்படுத்தப்படும்போது முன்னாள் பாதுகாப்பு செயலாளர் எவ்வாறு மௌனமாகயிருக்கமுடியும் எனவும் சன்னஜெயசூசுமன கேள்வி எழுப்பியுள்ளார்.

13வது திருத்தம் ; கோட்டாபய ராஜபக்க்ஷ மௌனம் கலைப்பாரா? | 13Th Amendment Will Gotabaya Break Silence

கோட்டாபய ராஜபக்க்ஷ இந்த விடயத்தில் தெளிவான நிலைப்பாட்டை எடுக்காவிட்டால் தற்போதைய நிகழ்ச்சி நிரலுக்கு அவர் மறைமுக ஆதரவு என்ற தவறான கருத்தைஅது ஏற்படுத்தலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் என்றவகையில் கோட்டாபய எவ்வாறு தனது மக்கள் ஆணையை தவறாக பயன்படுத்த அனுமதிக்க முடியும் எனவும் சன்னஜெயசூசுமன குறிப்பிட்டுள்ளார்.