கொழும்பு- தலவத்துகொடையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் திருமணத்திற்கு சென்றவர்கள், லிப்ட் திடீரென பழுதடைந்ததால், சுமார் 10 பேர் சிக்கி உயிராபத்தை சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
லிப்ட்க்குள் சிக்கியிருந்தவர்கள் கிட்டத்தட்ட 10 நிமிடங்கள் வெளியேற முடியாமல் போயுள்ளதுடன் தங்கள் உயிரை காப்பாற்றுமாறும் அவர்கள் கூச்சலிட்டுள்ளனர்.
அச்சத்தில் கூச்சலிட்ட மக்கள்
இறுதியில், காப்பாற்றும் முயற்சியின் நடுவில் லிப்ட் இடிந்து விழுந்த நிலையில் அதிர்ஷ்டவசமாக லிப்டில் இருந்தவர்கள் காயமின்றி உயிர் தப்பியுள்ளனர்.
லிப்ட் பராமரிப்பு இல்லாததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக லிப்டில் குற்றம் சுமத்தியுள்ள அதேவேளை, அங்கு அதிகமானோர் பயணம் செய்ததால் இது நடந்ததாக ஹோட்டல் நிர்வாகம் கூறுகிறது.
அத்துடன் லிப்ட் நின்றவுடன், மின்சார மணி அடித்ததாக ஹோட்டல் நிர்வாக அதிகாரிகள் கூறிய போதிலும் மணி அடிக்கவில்லை என லிப்டில் பயணம் செய்தவர்கள் சினம் வெளியிட்டுள்ளனர்.
குறித்த ஹோட்டலில் நேற்று இரண்டு திருமண நிகழ்வுகள் இடம்பெற்ற நிலையில் , அதில் கலந்து கொண்டவர்கள் லிப்ட்டில் சென்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த லிப்ட் செயலிழந்ததாகவும், அது கீழே விழவில்லை எனவும் ஹோட்டல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.