சிங்கப்பூரில் இருந்து கொழும்பு வரவுள்ள 10 ஆயிரம் சாகச வீரர்கள்!

0
203

சிங்கப்பூரிலுள்ள பிரபல சாகச மற்றும் பொழுதுபோக்கு நிறுவனமான ‘Go Bungy’ ஆண்டுதோறும் 10,000 சாகச வீரர்களை இலங்கைக்கு அழைத்துவர திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவலை தாமரைக் கோபுர முகாமைத்துவத்தின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

வெளிநாட்டில் இருந்து கொழும்புக்கு வரவுள்ள 10 ஆயிரம் சாகச வீரர்கள்! | 10 Thousand Adventurers Visit Singapore To Colombo

உலகில் உள்ள சுமார் 50,000 பங்கி வீரர்கள் அந்த நிறுவனத்துடன் இணைந்துள்ளதாகவும், அவர்களைத் தொடர்புகொள்வதற்கான ஒப்பந்தத்தில் ‘Go Bungy’ நிறுவனமும் தாமரைக் கோபுர நிர்வாகமும் கையெழுத்திட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், அந்த கலைஞர்களின் நிகழ்ச்சிகள் இந்த ஆண்டின் இறுதியிலிருந்து ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக சமரசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டில் இருந்து கொழும்புக்கு வரவுள்ள 10 ஆயிரம் சாகச வீரர்கள்! | 10 Thousand Adventurers Visit Singapore To Colombo