யாழ்ப்பாணத்தின் பெருமையை புகழ்ந்து தள்ளிய தென்னிந்திய நடிகை கஸ்தூரி!

0
186

சைவமும் தமிழும் கொட்டி கிடக்கின்ற ஒரு அருள் பூமி யாழ்ப்பாணம் என தென்னிந்திய திரைப்பட நடிகையும் பேச்சாளருமான கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரசித்திப் பெற்ற தாவடி அம்பலவாணர் முருகன் ஆலயத்தின் திருமஞ்ச திருவிழாவுக்கு நேற்றைய தினம் (29-07-2023) வருகை தந்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணம் ஒரு அருள் பூமி. இலங்கை முழுவதுமே முருகனின் கடாட்சம் தான் அமைந்துள்ளது. அண்மைக் காலமாக தான்  ஆங்காங்கே விகாரம் கட்டுகிறார்கள்.

சைவ சமயமும் இங்கேதான் இருக்கிறது. தெற்கில் கதிர்காமம் முதல் வடக்கே நல்லூர் யாழ்ப்பாணம் வரை எல்லாமே அவன் அருள் மட்டுமே இருக்கிறது.

யாழ்ப்பாணத்தின் பெருமையை புகழ்ந்து தள்ளிய தென்னிந்திய நடிகை! | Jaffna Full Of Saivism And Tamil Actress Kasthuri

மேலும், தமிழ் கடவுள் முருகன் இருக்கும் வரை தமிழ் உறவுகள் இருக்கும் வரை யாரும் நம்மை அசைக்க முடியாது. இந்த கோயிலுக்கு உள்ளே வரும் பொழுது அருமையான மந்திரங்கள் எல்லாம் ஓங்கி ஒலித்தன. இதைப்போன்று தமிழ் நாதஸ்வர கலைஞர்களின் அற்புத இசையில் எம்பெருமான் வளம் பெறும் காட்சி அற்புதமானது.

தமிழகத்தில் எல்லாம் இவ்வாறு கிடையாது. எல்லாவற்றையும் அரசாங்கம் எடுத்துக் கொண்டது. அதற்குப் பிறகு உண்டியலில் பணம் நிரப்புவதை மட்டுமே அவர்கள் குறியாக கொண்டிருந்தார்கள். இப்படியான அருமையான காட்சிகள் எல்லாம் அங்கே குறைந்துவிட்டது என தெரிவித்துள்ளார்.